துபாய் விமானங்களில் கடத்தி வந்த 1.85 கிலோ தங்கம் பிடிபட்டது

மீனம்பாக்கம்: துபாயிலிருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம்  ெசன்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் சிவகங்கையை சேர்ந்த ஒரு ஆண் பயணி உள்ளாடைகளுக்குள் 3 பார்சல்களில்  1.036 கிலோ தங்க பசை கடத்தி வந்தார். இதன் சர்வதேச மதிப்பு ரூ46.15 லட்சம். இதுபோல, துபாயில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் வந்த ஒரு பயணியின் உடைமைகளுக்குள் தங்க செயின்கள் 814 கிராம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதன் சர்வதேச மதிப்பு ரூ36.26 லட்சம். மொத்தம் ரூ82.5 லட்சம் மதிப்புடைய 1.85 கிலோ தங்க பசை, தங்க செயின்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பிறகு  இருவரும் கைது செய்யப்பட்டனர்.

Related Stories: