டாம்பிகோ: மெக்சிகோவில் நடைபெறும் அபியர்டோ ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு பைனலில் விளையாட, போலந்து வீராங்கனை மாக்தா லினெட் தகுதி பெற்றார். அரையிறுதியில் கனடாவின் ரெபக்கா மரினோவுடன் (31 வயது, 72வது ரேங்க்) மோதிய லினெட் (30 வயது, 55வது ரேங்க்) 3-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் 2 மணி, 16 நிமிடம் போராடி வென்றார்.