சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு பசும்பொன்னில் அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்; பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் 115-ஆவது பிறந்தநாள் விழா மற்றும் 60-ஆவது குருபூஜை விழாவை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டம், பசும்பொன் கிராமத்தில் உள்ள அன்னாரது நினைவிடத்தில் முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் வருகின்ற 30.10.2022 அன்று தமிழ்நாடு அரசு சார்பில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்த உள்ளார்கள்.