பாலக்காடு: பாலக்காடு மாவட்டத்தில் நெல் அறுவடை சீசன் துவங்கியுள்ளதால் தமிழகத்திலுள்ள அறுவடை இயந்திரங்களுக்கு மவுசு அதிகரித்துள்ளது.
நெல்களஞ்சியமான பாலக்காடு மாவட்டத்தில் முதல்போக நெல் அறுவடை தொடங்கி உள்ளது. கடந்த காலங்களை போல் அறுவடைக்கு கூலியாட்கள் கிடைப்பதில்லை. இதன் காரணமாக கேரள விவசாயிகள் தமிழகத்தில் பொள்ளாச்சி, உடுமலை, பழநி, திண்டுக்கல், மதுரை, தஞ்சாவூர் ஆகிய இடங்களிலிருந்து அறுவடை இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு தங்களது நிலங்களில் பயிரிட்டுள்ள நெல்பயிர்களை அறுவடை செய்து வருகின்றனர்.