கான்பரா: ஆஸ்திரேலியாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள 516 மில்லியன் அமெரிக்கன் டாலர் தொகையினை ஒதுக்கியுள்ளது அந்நாட்டு அரசு. காலநிலை மாற்றத்தால் ஆஸ்திரேலியாவில் பெரும்பாலான பகுதிகளில் வரலாறு காணாத அளவிற்கு மழை மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கடுமையாக பாதிப்படைந்துள்ளது. வடமேற்கு மற்றும் தென்கிழக்கு பகுதிகளில் பாயும் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரையோர பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் பலரும் வீட்டின் மொட்டை மாடிகளிலும், மேற்கூரைகளிலும் தஞ்சம் அடைந்தன.