தேவர் ஜெயந்தி விழா சசிகலா நேரில் மரியாதை

சென்னை: வி.கே.சசிகலா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115வது பிறந்தநாள் மற்றும் 60வது குருபூஜை விழாவை முன்னிட்டு வரும் 30ம் தேதி மதியம் 2 மணியளவில்

ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்துக்கு வி.கே.சசிகலா நேரில் சென்று மலர்தூவி மரியாதை செலுத்துகிறார். இந்த நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டு மரியாதை செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: