சென்னையில் உள்ள மணிமண்டபத்தில் அம்பேத்கர் முழு உருவச்சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் நிறுவப்பட்டுள்ள அம்பேத்கர் முழு உருவச் சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்பியுமான திருமாவளவனுக்கு, அம்பேத்கர் 132வது பிறந்த நாளன்று சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் அவரது முழு உருவச் சிலை நிறுவுவதற்கான உத்தரவு வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் 14.5.2022 அன்று அம்பேத்கர் மணிமண்டபத்தில் அந்த சிலையை நிறுவுவதற்கான இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதன்படி, சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் நிறுவப்பட்டுள்ள அம்பேத்கர் முழு உருவச் சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி, எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, சி.வி.கணேசன், மனோ தங்கராஜ், கயல்விழி செல்வராஜ், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், எம்பிக்கள் அந்தியூர் செல்வராஜ், ஆர்.கிரிராஜன், தமிழச்சி தங்கபாண்டியன், எம்எல்ஏக்கள் தாயகம் கவி, த.வேலு, சிந்தனைச்செல்வன், செல்வப்பெருந்தகை, எஸ்.எஸ்.பாலாஜி, எம்.பாபு, முகம்மது ஷா நவாஸ், துணை மேயர் மகேஷ் குமார், தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவர் திண்டுக்கல் லியோனி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: