சென்னை: தீபாவளியை கொண்டாட சொந்த ஊர்களுக்கு சென்றிருந்த மக்கள் சென்னை திரும்பி வருவதால் பரனூர் சுங்கச்சாவடி, பெருங்களத்தூர், தாம்பரம் உள்ளிட்ட இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 4 நாட்கள் தொடர் விடுமுறை முடிந்து மக்கள் மீண்டும் தங்கள் பணியிடங்களுக்கு திரும்பி வருகின்றனர். வழக்கமாக செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் அதிகாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் காவல்துறையினர் மற்றும் சுங்கச்சாவடி ஊழியர்கள் அதிகமானோர் பணியில் ஈடுபட்டிருந்தனர்.