பிறந்தநாள் விழாவில் இரு கோஷ்டிகள் மோதல்

அண்ணாநகர்: முகப்பேர் பகுதியை சேர்ந்தவர் வசந்த்.  இவருக்கு நேற்று முன்தினம்  பிறந்தநாள். இவரை பார்க்க வந்த நண்பர்கள் மாலை அணிவித்து வாழ்த்துகள் தெரிவித்தனர். இந்நிலையில், இரவு 11 மணி அளவில் பிறந்தநாள் வாழ்து சொல்ல வந்த சென்னை பாடி புதூர் மற்றும் முகப்பேர் பகுதியை சேர்ந்த இரு கோஷ்டிகளுக்கும் திடீர் தகராறு ஏற்பட்டது. இதில், 20க்கும் மேற்பட்டவர்கள் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதில்,  காவல்ராஜ்  உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ஜெ.ஜெ. நகர் போலீசார் படுகாயம் அடைந்த 4 பேரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். போலீசார் வழக்கு பதிவு செய்து இரு கோஷ்டிகள் மோதிக்கொண்டது ஏன் என பல கோணங்களில் விசாரிக்கின்றனர்.

Related Stories: