சின்னாளபட்டி: சின்னாளபட்டி அருகே, தொடர்மழை காரணமாக கொடியிலேயே திராட்சை பழங்கள் அழுகி வருகின்றன. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி அருகே சிறுமலை அடிவாரத்தில் வெள்ளோடு, பெருமாள்கோவில்பட்டி, அமலிநகர், ஜே.ஊத்துப்பட்டி, ஜாதிக்கவுன்டன்பட்டி, செட்டியபட்டி, மெட்டூர், கொடைரோடு, அம்மையநாயக்கனூர், காமலாபுரம் உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடந்த 40 வருடங்களாக திராட்சை பயிரிடப்பட்டு வருகிறது. இப்பகுதியின் மண் வளம் மற்றும் சிறுமலையில் இருந்து வரும் ஊற்று நீரால் இங்கு விளையும் திராட்சைகள் நல்ல ருசி மற்றும் கண்கவரும் நிறத்துடன் வளர்கிறது. இப்பகுதியில் விளையும் திராட்சைகளுக்கு தமிழகம் மற்றும் கேரளாவில் தனி மவுசு உண்டு.