சென்னை: ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் ஆதித்த கரிகாலன் என்ற கேரக்டரில் நடித்து பல்வேறு தரப்பினரின் பாராட்டைப் பெற்ற விக்ரம், அடுத்து பா.ரஞ்சித் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இதை ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கிறார். இப்படம் கோலார் தங்கச் சுரங்கத்தை உருவாக்கிய தமிழக தொழிலாளிகளின் கதை என்றும், அவர்கள் அப்போது சந்தித்த பிரச்னைகளைப் பற்றி பேசும் என்றும் கூறப்படுகிறது.