பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் தங்கலான்

சென்னை: ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் ஆதித்த கரிகாலன் என்ற கேரக்டரில் நடித்து பல்வேறு தரப்பினரின் பாராட்டைப் பெற்ற விக்ரம், அடுத்து பா.ரஞ்சித் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இதை ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கிறார். இப்படம் கோலார் தங்கச் சுரங்கத்தை உருவாக்கிய தமிழக தொழிலாளிகளின் கதை என்றும், அவர்கள் அப்போது சந்தித்த பிரச்னைகளைப் பற்றி பேசும் என்றும் கூறப்படுகிறது.

இப்படத்தின் ஷூட்டிங் ஆந்திர மாநிலம் கடப்பாவில் கடந்த 18ம் தேதி  தொடங்கியது. அப்போது விக்ரம், பசுபதி நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டது. இது விக்ரம் நடிக்கும் 61-வது படமாகும். இந்நிலையில், நேற்று இரவு படத்தின் தலைப்பு ‘தங்கலான்’ என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதில் மாளவிகா மோகனன், பூ பார்வதி நடிக்கின்றனர்.

Related Stories: