சென்னை: தமிழகத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை மேற்கொள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் மாநிலம் முழுவதும் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி, புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து வருகின்றனர். அதன்படி, சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா மற்றும் புகையிலைப் பொருட்களை முற்றிலும் ஒழிக்க சென்னை மாநகராட்சி மற்றும் காவல் துறையுடன் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கஞ்சா, குட்கா மற்றும் புகையிலை போன்ற தடைசெய்யப்பட்ட பொருட்களை சேமித்து வைப்பவர்கள் மற்றும் விற்பனை செய்யும் கடைகளின் மீது சென்னை மாநகர முனிசிபல் சட்டம் 1919, பிரிவு 379கி(1)ன்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.