இஸ்லாமாபாத்: பரிசு பொருட்களை விற்றது தொடர்பான குற்றச்சாட்டில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தேர்தலில் போட்டியிட 5 ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பதவி வகித்த போது, வெளிநாட்டு பிரமுகர்கள், தலைவர்கள் பரிசாக வழங்கிய விலை உயர்ந்த பொருட்களை கருவூலத்துக்கு அனுப்பவில்லை என குற்றம்சாட்டப்பட்டது. மேலும், பதவி விலகிய போது அந்த பரிசுப் பொருட்களையும் எடுத்துச் சென்று விட்டார். இவற்றை சர்வதேச சந்தையில் நல்ல விலைக்கு விற்றார். அது பற்றிய விவரங்களை வருமான வரி கணக்கு தாக்கலில் குறிப்பிடவில்லை. எனவே, அவரை தகுதி நீக்கம் செய்யும்படி தேர்தல் ஆணையத்துக்கு அரசு கோரிக்கை விடுத்தது.