ஆரணி: ஆரணி நகராட்சி ஆணையாளர் தமிழ்ச்செல்வி விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஆரணி நகராட்சிக்குட்பட்ட 33 வார்டுகள் மற்றும் ஆரணி டவுன் பகுதிகளில் நாளுக்கு நாள் மாடுகள் தொல்லை அதிகரித்துள்ளதால் சாலைகளில் மாடுகள் குறுக்கும் நெடுக்கமாக செல்வதால், அவ்வழியாக கடந்து செல்லும் வாகன ஓட்டிகள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்களுக்கு விபத்துகள் ஏற்பட்டு காயங்களுடனும், அச்சத்துடனும் சென்று வருகின்றனர். இதுகுறித்து நகரமன்ற உறுப்பினர்கள், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் தொடர்ந்து நகராட்சி அலுவலகத்திற்கு வந்து புகார் தெரிவித்து வருகின்றனர்.