சென்னை: ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக ஆட்சிக்கு வந்ததால் ஜெயலலிதா மரணத்தில் நீதி கிடைத்திருப்பதாக அவருடைய சகோதரர் மகள் ஜெ.தீபா தெரிவித்திருக்கிறார். சன் நியூஸுக்கு அவர் அளித்திருக்கும் சிறப்பு பேட்டியில், போயஸ் கார்டனில் பணி பெண்ணாக அனுமதிக்கப்பட்ட சசிகலா, தானே ஜெயலலிதா வாரிசு என கூறி, அரசியல் பிரவேசம் செய்ததை குறிப்பிட்டுள்ளார். ஆறுமுகசாமி அறிக்கை மூலமாக உண்மை வெளிவந்திருப்பதாக தீபா தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவிற்கு சசிகலா நம்பிக்கை துரோகம் செய்தது அறிக்கை மூலமாக அம்பலமாகி இருப்பதாக அவர் சாடியுள்ளார். பெங்களூரு சிறையில் இருந்தபோது ஜெயலலிதாவை நேரில் பார்த்ததாக தீபா தெரிவித்துள்ளார்.