உழவர் சந்தைக்கு புத்துயிர்: எர்ணாவூர் நாராயணன் பாராட்டு

சென்னை: சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் ஏ.நாராயணன் வெளியிட்டுள்ள அறிக்கை: 16வது சட்டமன்ற முதல் கூட்டத்தொடர் துவக்கத்திலேயே ஆளுநர் உரை நல்ல தொடக்கமாக அமைந்துள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை மூலம் சிறப்பான உரையாக நிகழ்ந்துள்ளது. முன்னாள் முதல்வர் கலைஞரால் தொடங்கப்பட்ட உழவர் சந்தைக்கு புத்துயிர் அளிக்கப்பட்டு மாநிலம் முழுவதும் உழவர் சந்தைகள் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பாக உள்ளது. உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் மூலம் 63,500 மனுக்கள் மீது உடனடியான தீர்வாக அமைந்துள்ளது. பொருளாதார ஆலோசனைக் குழு, நிபுணர்கள் குழு அறிவித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியும் பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது. பட்ஜெட் உரை மக்களுக்கு சிறப்பான உரையாக திகழ்ந்தமைக்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்….

The post உழவர் சந்தைக்கு புத்துயிர்: எர்ணாவூர் நாராயணன் பாராட்டு appeared first on Dinakaran.

Related Stories: