ஈரான் சிறையில் பயங்கர தீ: கைதிகள் பலி குறித்து அச்சம்

தெஹ்ரான்: ஈரான் நாட்டின் வடக்கு தெஹ்ரானில் உள்ள எவின் சிறைச் சாலையில் நேற்றிரவு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், சிறைச்சாலை முழுவதும் புகை மூட்டமாக காணப்படுகிறது. அரசியல் கைதிகளும், வெளிநாட்டு கைதிகளும் இந்த சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். ஈரானில் ஹிஜாப் ஆடை கட்டுப்பாடுகளுக்கு எதிராக போராடி வரும் பெண்களில் பலரை இந்த சிறையில் அடைத்து வைத்துள்ளனர்.

சிறை தீப்பற்றி எரிவதையும், அங்கு துப்பாக்கிச் சூட்டின் சத்தம் கேட்பதையும், ஈரான் மனித உரிமைகள் அமைப்பு வீடியோவாக வெளியிட்டுள்ளது. எவின் சிறைச்சாலையில் எத்தனை பேர் இறந்தார்கள் அல்லது காயமடைந்தார்கள் என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. அந்நாட்டின் அரசு ஊடகங்கள் வெளியிட்ட செய்தியின்படி, இதுவரை 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறுகிறது.

Related Stories: