காவிரி ஆற்றில் நீர்வரத்து மேலும் அதிகரிப்பு: ஒகேனக்கல் அருவியில் சுற்றுலா பயணிகள் 6வது நாளாக குளிக்க, பரிசல் இயக்க தடை

சேலம்: 6-வது நாளாக இன்றும் அருவிகளில் பரிசல்கள் இயக்கவும், சுற்றுலா பயணிகள் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான கர்நாடக மாநிலம் மற்றும் தமிழகத்தின் தேன்கனிக்கோட்டை, நாட்றாம்பாளையம், அஞ்செட்டி, ராசிமணல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதி மற்றும் தமிழக காவிரி கரையோரப்பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. வினாடிக்கு 1.80 லட்சம் கன அடியாக தண்ணீர் வரத்து உள்ளதால் 6-வது நாளாக இன்றும் அருவிகளில் பரிசல்கள் இயக்கவும், சுற்றுலா பயணிகள் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: