சென்னை: சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் தலைமை செயலாளர் திடீர் ஆய்வு செய்தார். சென்னை, ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் பிற மாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்தும் சிகிச்சைக்காக நோயாளிகள் வருகின்றனர். நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கானோர் வெளி நோயாளிகளாகவும், உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெறுகின்றனர். இதனால் இந்த மருத்துவமனை எப்பொழுதும் பரபரப்பாக காணப்படும்.