சென்னை: 5 எஸ்பிக்கள், ஒரு கூடுதல் எஸ்பி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 9 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு புதிய பணியிடங்கள் வழங்கப்பட்டுள்ளன. உள்துறைச் செயலாளர் பணீந்திர ரெட்டி வெளியிட்டுள்ள உத்தரவு: கோவை வடக்கு சட்டம் ஒழுங்கு துணை கமிஷனர் மாதவன், சிபிசிஐடி சைபர் கிரைம் எஸ்பியாகவும், அந்தப் பதவியில் இருந்த அசோக்குமார், கோவை போக்குவரத்து துணை கமிஷனராகவும், அந்தப் பதவியில் இருந்த மதிவாணன், கோவை வடக்கு சட்டம் ஒழுங்கு துணை கமிஷனராகவும், மதுரை 6வது பட்டாலியன் எஸ்பி புக்யா சினேகா பிரியா, சிவில் சப்ளை சிஐடி மதுரை மண்டல எஸ்பியாகவும், திருப்பூர் நகர தலைமையிட துணை கமிஷனர் பாஸ்கரன், மதுரை 6வது பட்டாலியன் எஸ்பியாகவும், தேனி உத்தமபாளையம் கூடுதல் எஸ்பி ஸ்ரேயா குப்தா, தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் உதவி எஸ்பியாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.