சென்னை: சூளைமேடு பகுதியை சேர்ந்தவர் சித்ரா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் வீட்டில் வேலை செய்து வருகிறார். இவருக்கு 18 வயதில் மகள் உள்ளார். அவர் அருகில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். சித்ரா மகள் கல்லூரிக்கு செல்லும் போதும், வரும் போதும், சூளைமேடு அண்ணா நெடும்பாதையை சோந்த் கஞ்சா வியாபாரியான ரஷீத்(28) என்பவர், பின் தொடர்ந்து தன்னை காதலிக்கும் படி தொந்தரவு ெசய்து வந்துள்ளார். இதுகுறித்து மாணவி தனது தாய் சித்ராவிடம் கூறி அழுதுள்ளார். சித்ராவும் தனது மகளிடம் தகராறு செய்யும் ரஷீத்தை நேரில் கண்டித்துள்ளார். ஆனாலும், ரஷீத் சித்ராவிடம் உனது மகளை எனக்கு திருமணம் செய்து கொடு என்று கூறி மிரட்டியுள்ளார். இதற்கிடையே சித்ரா மகள் நேற்று முன்தினம் கல்லூரி முடிந்து வீட்டிற்கு சென்றுள்ளார். வழக்கம்போல் பின் தொடர்ந்து வந்த ரஷீத், ‘உன்னை காதலிக்கிறேன். என்னை திருமணம் செய்து கொள்’ என்று கேட்டுள்ளார்.