புதுடெல்லி: கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் ஆட்சிக் காலத்தில், பெங்களூரு மேம்பாட்டு ஆணையத்தில் நடந்த ஊழல் தொடர்பாக பாஜ மூத்த தலைவர் எடியூரப்பா, அவரது மகனும், மாநில பாஜக துணைத் தலைவருமான பி.ஒய்.விஜயேந்திரா, கூட்டுறவு அமைச்சரும் முன்னாள் பிடிஏ தலைவருமான எஸ்.டி.சோமசேகர், முன்னாள் பிடிஏ தலைவர் ஜி.சி.பிரகாஷ், எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய உறவினர் சந்திரகாந்த் ராமலிங்கம் ஆகியோர் உள்பட 8 பேர் மீது லோக் ஆயுக்தா போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த ஊழல் குற்றச்சாட்டின் கீழ் எடியூரப்பா மீதான வழக்கை ரத்து செய்ய கர்நாடக உயர் நீதிமன்றம் மறுத்தது.