அமெரிக்க தூதரகம் மூலம் ஆங்கில பயிற்சி பெற்ற மாநகராட்சி ஆசிரியர்கள் 24 பேருக்கு சான்றிதழ்: மேயர் பிரியா வழங்கினார்

சென்னை: அமெரிக்க தூதரகம் மூலம் ஆங்கில பயிற்சி பெற்ற சென்னை மாநகராட்சி பள்ளிகளின் 24 ஆசிரியர்களுக்கு சான்றிதழ்களை மேயர் பிரியா வழங்கினார்.  அமெரிக்க தூதரகத்தின் சார்பில் சென்னை மாநகராட்சி பள்ளிகளைச் சார்ந்த ஆசியர்களுக்கு அளிக்கப்பட்ட பிற மொழி பேசுபவர்களுக்கான ஆங்கிலம் கற்பிக்கும் முறையில் பயிற்சி பெற்ற ஆசிரியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி ரிப்பன் கட்டிட கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், பயிற்சி பெற்ற சென்னை மாநகராட்சி பள்ளிகளைச் சார்ந்த 24 ஆசியர்களுக்கு சான்றிதழ்களை மேயர் பிரியா மற்றும், அமெரிக்க தூதரகப் பொது விவகார அலுவலர் ஜெனிபர் புல்லக் ஆகியோரும் வழங்கினர். இந்நிகழ்ச்சியில், துணை மேயர் மகேஷ்குமார், மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி, ஆளுங்கட்சித் தலைவர் ராமலிங்கம், கல்விக் குழுத் தலைவர் விசுவநாதன், துணை ஆணையாளர் டி.சினேகா, அமெரிக்கத் தூதரக கலாச்சார விவகார அலுவலர் ஸ்காட் ஹார்ட்மேன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: