டிவி நடிகை புகார் நடிகர் அர்னவுக்கு சம்மன்

சென்னை: சின்னத்திரை நடிகர் அர்னவ், நடிகை திவ்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், இந்து முறைப்படி அர்னவ்வை திருமணம் செய்துகொண்ட படத்தை திவ்யா தனது சோஷியல் மீடியாவில் பதிவிட்டார். இதனால், இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டது. அப்போது திவ்யா தாக்கப்பட்டார். மேலும் அர்னவ், வேறு ஒரு நடிகையுடன் கள்ளத்தொடர்பு வைத்து இருந்ததாக அவரது மனைவி திவ்யா குற்றம்சாட்டி வந்தார். இது குறித்து திவ்யா போரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். தற்போது திவ்யா அளித்த புகாரில் அர்னவ் மீது கொலை மிரட்டல், பெண் வன்கொடுமை உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து அர்னவ்வை விசாரணைக்கு ஆஜராகுமாறு போரூர் அனைத்து மகளிர் போலீசார் கூறி வந்த நிலையில், அவர் விசாரணைக்கு ஆஜராகாமல் தொடர்ந்து காலம் கடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து நாளை (14ம்தேதி) இந்த வழக்கு சம்பந்தமாக போரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என போலீசார் அர்னவ்விற்கு சம்மன் அனுப்பியுள்ளனர். இது சின்னத்திரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: