லண்டன் : பிரிட்டன் 3-ம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா அடுத்த ஆண்டு மே மாதம் 6-ம் தேதி நடைபெறும் என்று பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. பிரிட்டன் ராணி எலிசபெத் 96-வது வயதில் கடந்த செப்டம்பர் 8-ம் தேதி ஸ்காட்லாந்தில் மரணமடைந்தார். இதையடுத்து அவருடைய மகன் சார்லஸ் பிரிட்டன் மன்னனாக அறிவிக்கப்பட்டார். 3-ம் சார்லஸ் என்று அழைக்கப்படும் அவர் கடந்த மாதம் அரியணை ஏறினார். இந்நிலையில், 3-ம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா 2023-ம் ஆண்டு மே மாதம் 6-ம் நாள் லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அவையில் நடைபெறும் பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரபூர்வமாக செய்தி வெளியிட்டுள்ளது.