சென்னை: உத்திரமேரூர் அருகே குலதெய்வம் கோயிலில் ஆந்திர அமைச்சர், நடிகை ரோஜா சுவாமி தரிசனம் செய்தார். உத்திரமேரூர் அடுத்த திருமுக்கூடல் கிராமத்தில் பிரபல திரைப்பட இயக்குனர் ஆர்.கே.செல்வமணியின் பூர்வீக வீடு உள்ளது. அவர் அவ்வப்போது இங்கு வந்து செல்வார். இந்நிலையில் ஆர்.கே.செல்வமணியின் மனைவியும், ஆந்திர சுற்றுலாத்துறை அமைச்சருமான நடிகை ரோஜா திருமுக்கூடல் கிராமத்திற்கு குடும்பத்துடன் வந்தார்.