நடிகை ரோஜா சுவாமி தரிசனம்

சென்னை: உத்திரமேரூர் அருகே குலதெய்வம் கோயிலில் ஆந்திர அமைச்சர், நடிகை ரோஜா சுவாமி தரிசனம் செய்தார். உத்திரமேரூர் அடுத்த திருமுக்கூடல் கிராமத்தில் பிரபல திரைப்பட இயக்குனர் ஆர்.கே.செல்வமணியின் பூர்வீக வீடு உள்ளது. அவர் அவ்வப்போது இங்கு வந்து செல்வார். இந்நிலையில் ஆர்.கே.செல்வமணியின் மனைவியும், ஆந்திர சுற்றுலாத்துறை அமைச்சருமான நடிகை ரோஜா திருமுக்கூடல் கிராமத்திற்கு குடும்பத்துடன் வந்தார்.

அவர், குலதெய்வம் செல்லியம்மனுக்கு பொங்கலிட்டு வழிபட்டார். பிறகு பொதுமக்களுக்கு கோயில் வளாகத்தில் அன்னதானம் வழங்கினார்.  இதுகுறித்து அவர் கூறுகையில், அமைச்சர் பதவி ஏற்றவுடன் குலதெய்வம் கோயிலுக்கு வருவதாக வேண்டி இருந்தேன். அதன் அடிப்படையில் குலதெய்வ கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தேன் என்றார்.

Related Stories: