மும்பை: இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக முன்னாள் கிரிக்கெட் வீரர் ரோஜர் பின்னி தேர்வு செய்யபட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்திய கிரிக்கெட் சங்க வாரியத்தின் பொறுப்பாளர்கள் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. பிசிசிஐ தலைவர், செயலாளர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது பிசிசிஐ தலைவராக கங்குலியும், செயலாளராக ஜெய் ஷாவும் கடந்த 2019-ம் ஆண்டு பதவியேற்று கொண்டனர். இவர்கள் பதவி காலம் முடிவடைய உள்ள நிலையில் ஜெய் ஷா மீண்டும் செயலளராக போட்டியிடுகிறார்.