சென்னை: வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் புழல், சோழவரம் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3300 மில்லியன் கன அடி. தற்போது 2686 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. நேற்று முன்தினம் 300 கன அடியாக நீர்வரத்து தற்போது 485 கன அடியாக அதிகரித்து உள்ளது.