லண்டன்: ஈரானில் நடைபெறும் பெண்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பதாக நடிகை பிரியங்கா சோப்ரா கூறியுள்ளார். ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரானில் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஈரான் போராட்டத்தைத் தொடர்ந்து உலகநாடுகளைச் சேர்ந்த பல பெண்கள் தங்களது கூந்தலை வெட்டி, அதை இணையத்தில் வெளியிட்டு ஈரான் பெண்களது போராட்டத்துக்கு வலுசேர்த்தனர். இந்த எதிர்ப்புக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் சுவீடன் எம்.பி, கடந்த புதன்கிழமை, ஈரான் பெண்களுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில், ‘பெண்கள், வாழ்வு, விடுதலை’ என்று முழக்கமிட்டு தன் முடியை வெட்டிக் கொண்டார்.