அரசு, பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 25% போனஸ்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகங்களிலும், பொதுத்துறை நிறுவனங்களான மின்சார வாரியம், குடிநீர் வாரியம், சிவில் சப்ளை கழகம், வீட்டு வசதி வாரியம், ரப்பர் மற்றும் தோட்ட வாரியம், சர்க்கரை கழகங்கள், சிறு தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரிபவர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 25 சதவீத அளவில் போனஸ் மற்றும் கருணை தொகையாக அளித்திடும் வகையில் தமிழக அரசு அறிவிப்பை உடனடியாக வெளியிட வேண்டும்.குறிப்பாக, போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தமிழக அரசு, 25 சதவீத அளவில் முன்கூட்டியே போனஸ் வழங்க கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: