லாகோஸ்: நைஜீரியாவின் தென்கிழக்கு மாநிலமான அனம்பிராவில் பலத்த மழை பெய்து வருகிறது. கால்வாய், ஆறுகளில் பெரும் வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைவதற்காக மக்கள் படகுகளில் பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில் அனம்பிராவின் ஓக்பாரு பகுதியில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்திற்கு மத்தியில் மக்கள் சென்ற படகு சிக்கியதால் அதில் பயணம் செய்த பலர் நீரில் மூழ்கினர்.