கொடநாடு கொலை வழக்கை விசாரிக்க சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு

கோவை: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரிக்க 2 கூடுதல் டிஎஸ்பிக்கள், 3 டிஎஸ்பிகள், அடங்கிய தனிப்படை அமைத்து சிபிசிஐடி டிஜிபி உத்தரவிட்டுள்ளார். நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2017ல் நடந்த கொடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.  

சசிகலா உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் விசாரிக்கப்பட்டனர். இந்நிலையில் வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார். விரைவில் விசாரணை துவங்க உள்ள நிலையில், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரிக்க சிபிசிஐடி போலீசார் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்துள்ளனர். சிபிசிஐடி டிஜிபி ஷகில் அக்தர் உத்தரவின் பேரில், 2 கூடுதல் டிஎஸ்பிக்கள், 3 டிஎஸ்பிகள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.  

Related Stories: