கத்திமுனையில் பணம் பறித்த பிரபல ரவுடி உள்பட 2 பேர் பிடிபட்டனர்

பெரம்பூர்: வியாசர்பாடி அன்பழகன் தெருவை சேர்ந்தவர் தியாகராஜன் (40), தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவர், நேற்று முன்தினம் மாலை வியாசர்பாடி முல்லை நகர் அருகே வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது 2 பேர் கத்தியை காட்டி மிரட்டி இவரிடம் இருந்து ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்து சென்றனர். இதுகுறித்து தியாகராஜன் எம்.கே.பி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் அம்பேத்கார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தார்.

அப்போது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்கில் தொடர்புடைய வியாசர்பாடி உதயசூரியன் நகர் பகுதியைச் சேர்ந்த பிரவீன்ராஜ் (எ) அஜித் (28) என்ற நபர் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. சம்பவத்தன்று இரவு முல்லை நகர் சுடுகாடு அருகே பதுங்கி இருந்த பிரவீன் ராஜை எம்கேபி நகர் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் கொடுத்த தகவலின்பேரில் வியாசர்பாடி எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்த சங்கர் (23) என்ற நபரையும் கைது செய்தனர். இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த எம்கேபி நகர் போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: