சென்னை: ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக 3பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏழுகிணறு பகுதியில் ஒலியுல்லா என்பவரின் மகனுக்கு ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.6.20 லட்சம் மோசடி செய்துள்ளனர். பண மோசடியில் ஈடுபட்ட அருண் ஸ்டீபன், சீனிவாசன், ரபீக் ஆகியோர் மீது வடக்கு கடற்கரை போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.