நெல்லை: தென்காசி அருகே மேலகரம் என்ஜிஓ காலனியை சேர்ந்தவர் அருணாசலம் (68). இவர், தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் தாலுகா அலுவலகத்தில் கடந்த 2007ம் ஆண்டு தாசில்தாரராக பணியில் இருந்தபோது லஞ்ச வழக்கில் கைதானார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். இதனையடுத்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இவ்வழக்கை விசாரித்த நெல்லை நீதிமன்றத்தில் கடந்த 2017ல் தாசில்தாருக்கு ஒரு ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.