ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் பிடிஓ அலுவலக வளாகத்தில் ரூ.20 லட்சத்தில் மூலிகை பூங்கா அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி பட்டு நூல் சத்திரம் பகுதியில் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகம் இயங்கி வருகிறது. ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் உள்ள 58 ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு அலுவலக பணிகளுக்காக இந்த அலுவலகம் வந்து செல்கின்றனர். இரண்டு வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்பட 50க்கும் அதிகமான ஊழியர்கள் பாணியில் உள்ளனர். மேலும், இந்த வளாகத்தில் ஆர்டிஓ அலுவலகம், அஞ்சலக அலுவலகம், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் அலுவலகம், அனைவருக்கும் கல்வி இயக்க அலுவலகம், மாற்றுத்திறனாளிகள் பயிற்சி பள்ளி, இ-சேவை மையம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.