திருவொற்றியூர்: மாதவரத்தில் தொழிலதிபரை கடத்திய வழக்கில் 7 வருடமாக தலைமறைவான குற்றவாளியை போலீசார் துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து கைது செய்தனர். மாதவரம் தணிகாசலம் நகர் நடேசன் தெருவை சேர்ந்தவர் கார்த்திக் (25), தொழிலதிபர். இவர் கடந்த 2015ம் ஆண்டு தொழில் போட்டியின் காரணமாக கடத்தப்பட்டார். இது சம்பந்தமாக மாதவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது கடத்தியவர்களிடமிருந்து தப்பி வந்த கார்த்திக், காஞ்சிபுரம் மாவட்டம், வெள்ளவேடு பகுதியை சேர்ந்த மகேஷ் (41). என்பவர் தான் தன்னை கடத்தினார், என்று போலீசாரிடம் தெரிவித்தார்.