புதுடெல்லி: ‘ஆபரேஷன் சக்ரா’ என்ற பெயரில் 115 இடங்களில் சிபிஐ, மாநில போலீசார் அதிரடி சோதனை நடத்திய நிலையில், 26 சைபர் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் இணைய வழியில் நிதி மோசடி, தகவல் திருட்டு உள்பட பல சைபர் குற்றங்களால் அப்பாவி மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், சர்வதேச போலீஸ் அமைப்பான இன்டர்போல் மற்றும் அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்பு அமைப்பான எப்பிஐ கொடுத்த ரகசிய தகவல்கள் அடிப்படையில் நிதி மோசடி குற்றங்கள் தொடர்பாக டெல்லி, பஞ்சாப், கர்நாடகா உள்ளிட்ட 8 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் 87 இடங்களில் சிபிஐயும், 28 இடங்களில் மாநில போலீசாரும் கடந்த 2 நாட்களுக்கு முன் ‘ஆபரேஷன் சக்ரா’ என்ற பெயரில் சோதனை நடத்தினர்.