நெல்லை: ராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடி பகுதிகளில் காற்றாலைகள் மூலம் மின் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளதாக ஒன்றிய இணை அமைச்சர் பகவந்த் குமார் தெரிவித்துள்ளார். பிரேசில் நாட்டை சேர்ந்த நிறுவனம் 88 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்தியாவிலேயே அதிக அளவில் மின் உற்பத்தி திறன் கொண்ட கற்றாழை டர்பைன் வள்ளியூர் அருகே அமைத்துள்ளது. இதன் மூலம் 4.2 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த காற்றாலை டர்பைனை ஒன்றிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை இணை அமைச்சர் பகவந்த் குமார் நேரில் பார்வையிட்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் எதிர்காலத்தில் 7 மேகவாட் மின்சார உற்பத்தி திறன் கொண்ட டர்பைன் தயாரிக்க உள்ளதாக கூறினார்.