ஐதராபாத்: தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் (கேசிஆர்) பாஜவுக்கு மாற்றாக தேசிய அளவில் கட்சி தொடங்க இருப்பதாகவும் விஜயதசமியன்று இதற்கான அறிவிப்பை அவர் வெளியிடுவார் என தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி (டிஆர்எஸ்) தெரிவித்துள்ளது. தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் முன்பு பாஜ.வுடன் நெருக்கமாக இருந்தார். தற்போது அக்கட்சியுடன் கடுமையான மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார். வரும், 2024ம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜவை தோற்கடிக்க, தேசிய அளவில் கூட்டணியை உருவாக்க சந்திரசேகர ராவ் முயன்று வருகிறார். இது தொடர்பாக பீகார் முதல்வர் நிதிஷ், சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ்,மதசார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி உள்ளிட்ட தலைவர்களை அவர் சந்தித்து பேசினார்.