குன்றத்தூர்: மாங்காடு அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் அண்ணன் கண்ணெதிரே தங்கை உடல் நசுங்கி பரிதாபமாக பலியானார். மாங்காடு அடுத்த கெருகம்பாக்கத்தை சேர்ந்தவர் மரியம் ஜோசப் வின்ஸ்டன் (65). இவர், சென்னை, ஜாபர்கான்பேட்டையில் வசிக்கும் தனது தங்கை ரோஸ்லின் பிரமிளா (55) என்பவரை நேற்று தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் அழைத்து வந்தார். வண்டி கெருகம்பாக்கம் பிரதான சாலையில் வந்தபோது, இவர்களது வாகனத்தை முந்திச்செல்ல முயன்ற லாரி ஒன்று, எதிர்பாராத விதமாக வின்ஸ்டன் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் மீது உரசியது. இதில், 2 பேரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். அப்போது, லாரியின் பின் சக்கரம் ரோஸ்லின் மீது ஏறி இறங்கியது.