சென்னை: அகில இந்திய சிட் பண்ட் சங்கத்தின் புதிய நிர்வாகக் குழுவை ஏற்படுத்தும் வகையில், சென்னையில் சங்க தேர்தல் நடத்தப்பட்டு புதிய நிர்வாகிகள் தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்டனர். அகில இந்திய சிட் பண்ட் சங்கத்தின் புதிய தலைவராக வி.சி.பிரவீன் தேர்வு செய்யபட்டுள்ளார். ஆலோசனை குழு சேர்மனாக சிவராமகிருஷ்ணன், பொதுச் செயலாளராக சிற்றரசு, அமைப்பு செயலாளராக கமல் பாம்பானி, பொருளாளராக அருணாச்சலம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள வி.சி.பிரவீன் நிருபர்களிடம் கூறியதாவது:1982ல் இயற்றப்பட்ட ஒரு சிட் பண்ட் சட்டத்தில் தற்போதைய கால நடைமுறைகளுக்கு ஏற்றபடி சில திருத்தங்கள் அதில் கொண்டு வர வேண்டும்.