ரேஷன் ஊழியர்களை டிஎன்பிஎஸ்சி மூலம் நியமிக்க வேண்டும்: ராமதாஸ் அறிக்கை

சென்னை: நியாய விலைக்கடை பணியாளர்களை டிஎன்பிஎஸ்சி மூலம் நியமிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் உள்ள நியாய விலை கடைகளுக்கு விற்பனையாளர் மற்றும் கட்டுனர் பணிகளுக்கு 4,000 பேரை நியமிக்க தமிழக அரசின் கூட்டுறவுத் துறை முடிவு செய்திருக்கிறது.

இப்போது நீண்ட காலத்திற்கு பிறகு நியாயவிலைக் கடை விற்பனையாளர் மற்றும் கட்டுனர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ள நிலையில், அதற்கான நடைமுறை ஐயத்திற்கு அப்பாற்பட்டதாக இருந்தால்தான் ஏழை இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். எனவே,  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நியாயவிலைக் கடை பணியாளர்களை தேர்ந்தெடுக்கவும் தமிழக அரசு ஆணையிட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: