ஹனோய்: வியட்நாமை இன்று அதிகாலை ‘நோரு’ என்று பெயரிடப்பட்ட புயல் தாக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனை முன்னிட்டு கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் உட்பட 8 லட்சம் பேர் பாதுகாப்பு கருதி வெளியேற்றப்பட்டனர். இவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.