சென்னை: ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஆலோசனையில் உள்ளார். பண்டிகை காலத்தில் அதிகரிக்கும் ஆம்னி பேருந்து கட்டணங்களை முறைப்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொண்டுள்ளார். சென்னை எழிலகத்தில் அமைந்துள்ள போக்குவரத்து துறை ஆணையர் அலுவலகத்தில் கூட்டம் நடைபெறுகிறது. போக்குவரத்து துறை செயலாளர் கோபால் ஆணையர் நிர்மல்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.