வாரணாசி: தீவிரவாத நடவடிக்கைக்காக நிதி வசூலில் ஈடுபட்ட இருவரை வாரணாசியில் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் உறுப்பினர்களின் வீடுகளில் மாநில தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் திடீர் சோதனை நடத்தினர். குறிப்பிட்ட சமூகத்தினரின் மத உணர்வுகளைத் தூண்டிவிடும் கையில் நிதி வசூல் செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில் ஜெய்த்புராவைச் சேர்ந்த ரிஸ்வான் அகமது மற்றும் ஆலம்பூரை சேர்ந்த முகமது ஷாஹித் ஆகியோரை கைது செய்தனர்.