புவனேஸ்வர்: பீகாரில் இருந்து கொண்டு வரப்பட்ட போலி ரத்த அழுத்த மாத்திரைகளை ஒடிசா போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன் ஒடிசாவின், புவனேஸ்வர், கட்டாக் நகரங்களில் மாநில மருந்து கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கிடங்குகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் டெல்மா 40, டெல்மா ஏஎம் மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றை பரிசோதனை கூடங்களில் சோதித்து பார்த்தபோது, அவை போலியானது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. மருந்துகளை மொத்த விற்பனை செய்த விநியோகஸ்தர்களிடம் விசாரித்த போது, பீகாரில் உள்ள கயா மற்றும் கர்நாடகாவின் பெங்களூரில் இருந்து இந்த மாத்திரைகளை வாங்கி வந்ததாக தெரிவித்தனர்.