தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பொதுக்கூட்டத்தில் பேசும்போது முழு விவரங்களை தெரிந்து கொண்டு பேச வேண்டும்: திருப்பூர் துரைசாமி கண்டனம்

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தில் கைதாகி சிறை செல்லவில்லை என்று பொதுக்கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலைக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அண்ணாமலை மிசா சட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறை செல்லவில்லை என்று தெரிவித்தார். வேறு வழக்கில் சென்றதாகவும் அவர் குறிப்பிட்டார். அண்ணாமலையின் இந்த அறியாமை பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. மிசா சட்டத்தில் ஸ்டாலின் சிறை சென்றதை அண்ணாமலை கொச்சைப்படுத்துகிறார் என்று கூறியுள்ள திருமாவளவன், கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ள திராணி இல்லாதவர்கள் தான் அண்ணாமலை என்று குறிப்பிட்டார்.

தமிழ்நாடு பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை முழு விவரங்கள் தெரியாமல் பேசி வருகிறார் என்று மதிமுக அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி விமர்சித்துள்ளார். மிசா சட்டத்தில் ஸ்டாலின் கைதாகவில்லை என்றால் எந்த சட்டத்தில் கைதானார் என்பதை அண்ணாமலை தான் விளக்க வேண்டும் என்று மதிமுக அவைத்தலைவர் துரைசாமி கேட்டுக்கொண்டுள்ளார். பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அண்ணாமலை முதலமைச்சர் ஸ்டாலின் மிசா சட்டத்தில் சிறை செல்லவில்லை என்று கூறிய கருத்துக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

Related Stories: