கிருஷ்ணகிரி : ஓசூர் அருகே தனியார் நிறுவனத்தில் இருந்து வெளியேறும் ரசாயன கழிவு நீரால் பலவிதமான நோய்கள் உள்ளவதாக கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே தியகரசனபள்ளி, கொழும்பூர், மாதர்சனபள்ளி, எம் தொட்டி, சிகரலப்பள்ளி உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 800 க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தியகரசனபள்ளி கிராமத்திற்கு அருகே செயல்பட்டு வரும் தனியார் தொழிச்சாலையில் இருந்து வெளியேறும் கழிவு நீரால் விளைநிலங்கள் மற்றும் நீர்நிலைகள் மாசடைந்து இருப்பதாக கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.