கூடலூர் : கம்பம்-கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் காய்கறி கழிவுகள் கொட்டபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது. தேனியில் தொடங்கி கம்பம், கூடலூர், குமுளி தேசிய நெடுஞ்சாலை 220 தமிழகத்தையும் கேரளத்தையும் இணைக்கும் முக்கிய சாலையாக உள்ளது. இந்த சாலை தேசிய நெடுஞ்சாலை துறை பராமரிப்பில் உள்ளது. இதில் கம்பம் குமுளி நெடுஞ்சாலையில், கம்பம், கூடலூர் பகுதியில் உள்ள காய்கறி மொத்தவியாபார கடைகளில் மீதமாகும் மற்றும் அழுகிய காய்கறிகளை, கடை உரிமையாளர்கள் வேலையாட்கள் மூலம் இரவுநேரங்களில் நெடுஞ்சாலை ஓரங்களில் கொட்டி விடுகின்றனர்.